இந்த விளம்பரத்தைக் கிளிக் செய்தவுடன் ஸ்கிராட்ச் கார்டை கொண்ட ஒரு மோசடி இணையதளம் தோன்றும். அது கீறப்பட்டால், ஒரு தொகையைக் காண்பிக்கும். பாதிக்கப்பட்டவர் அதை தொடும்போது அவர்கள் மொபைலில் நிறுவப்பட்டுள்ள UPI செயலிகளுக்கு Gpay. Phonepe PayTM, முதலியன) திருப்பிவிடப்படுவார்கள், அது அந்த தொகையைப் பெற UPI பின் நம்பரை உள்ளிடும்படி அவர்களை தூண்டுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தொகையைப் பெற UPI பின் நம்பரை உள்ளிட தேவையில்லை என்பது தெரியாததால், அவசர அவசரமாக, UPI பின்னை உள்ளிட்டு பணத்தை இழக்க நேரிடும்.
இதுபோன்ற திட்டங்களை எதிர்கொள்ளும் போது பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற மோசடி செயல்களுக்கு பலியாகாமல் இருக்க, கோரப்படாத செய்திகள் அல்லது விளம்பரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் UPI பின்கள் அல்லது வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம். சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் பரவும் பொதுவான மோசடிகள் மற்றும் மோசடி தந்திரோபாயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஏதேனும் மோசடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக சைபர் க்கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930- டயல் செய்யவும் அல்லது www.cybercrime govin உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்.
The post ஜன் தன் யோஜனா திட்டத்தை பயன்படுத்தி பிரதமர் மோடியின் புகைப்படம் வைத்து மோசடி: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.