இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் மூலவராக ஆஞ்சநேயர், ராமன், சீதை, லட்சுமணன் சன்னதிகள் தனியாக உள்ளன. 3 ராஜகோபுரம், 3 பிரகாரங்களுடன் அமைந்துள்ள இக்கோயிலின் எதிரில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூமிக்கடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நடவாவி கிணறு உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சஞ்ஜீவிராயர் கோயில் முறையாக பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து வருகிறது. கோயிலின் ராஜகோபுரம் மற்றும் பிரகாரங்களில் செடி, கொடிகள் முளைத்துள்ளன.
மேலும், சில இடங்களில் கற்கள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ள இக்கோயில் பிரகாரத்தில், ஒருசிலர் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பக்தர்கள் வருகையும் குறைந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சஞ்ஜீவிராயர் கோயிலை முறையாக பராமரிக்க, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post அய்யங்கார்குளம் பகுதியில் சேதமடைந்த சஞ்ஜீவிராயர் கோயில்: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.