அப்படி வெளியான அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை பற்றி ஆலோசிப்பதற்கான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று (நேற்று) நடத்தினோம். அரசு உயர் அதிகாரிகள்-அலுவலர்கள்-பணியாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில், ஒவ்வொரு அறிவிப்பையும் உரிய காலத்தில் செய்து முடித்திடக் கேட்டுக்கொண்டோம். சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில், நம் தமிழ்நாட்டு வீரர் – வீராங்கனையர் ஆண்டிற்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்கிற வகையில் பணியாற்றுவோம் என வலியுறுத்தினோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சர்வதேச, இந்திய அளவிலான போட்டிகளில் ஆண்டுக்கு 100 பதக்கங்களை உறுதி செய்ய வேண்டும்: தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
