அவர்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் ஜீப்பை திருப்பியபோது, லாரி மீது மோதி பேரிகார்டில் இடித் நின்றது. லாரி நிற்காமல் சென்று விட்டது. இதைய பயன்படுத்தி பைக்கில் இருந்து விழுந்த 2 வாலிபர்களும் தப்பியோடிவிட்டனர். படுகாயம் அடைந்த இன்ஸ்பெக்டர் மாதையன், டிரைவர் சிவக்குமார் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், பைக்கில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு விரைவில் தமிழக அரசின் சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
The post பைக்கில் சென்றவர்களை விரட்டியபோது ஜீப் மீது லாரி மோதி இன்ஸ்பெக்டர் படுகாயம் appeared first on Dinakaran.