பெரும்பாலான இந்திய குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன: காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “பெரும்பாலான இந்திய குடும்பங்கள் பணவீக்கம், அதிக கடன் உள்ளிட்ட நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. 2023ம் நிதியாண்டில் நிகர குடும்ப நிதி சேமிப்பு ஐந்தில் ஒரு பங்கு குறைந்துள்ளது. 2023ம் நிதியாண்டில் வீட்டு வசதி அல்லாத கடன்கள் இருமடங்காக அதிகரித்துள்ளது. இது வீட்டு செலவுகளுக்காக வாங்கப்பட்ட கடன்களாக இருக்கலாம். பெரும்பாலான இந்திய குடும்பங்கள் மோடி ஏற்படுத்திய நிதி நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

The post பெரும்பாலான இந்திய குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன: காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: