இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் இணைந்து பிரசாரம்: செல்வப்பெருந்தகை தகவல்

சென்னை: சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், எஸ்.சி., எஸ்.டி. துணை திட்டம் புதுப்பிக்கப்படும், எஸ்.சி., எஸ்.டி.க்கான பட்ஜெட் அறிவிக்கப்படும், மக்கள் தொகை அளவை கணக்கில் கொண்டு பட்ஜெட் தயாராகும். வனச்சட்டத்தை திருத்தம் செய்து பழங்குடியினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து பழங்குடியினருக்கு எதிரான சட்டங்களும் திரும்பப் பெறப்படும். திருச்சியில் பிறந்தவர் நிர்மலா சீதாராமன். ஏன் திருச்சியில் சீட் கொடுக்கவில்லை? தென் சென்னையில் பிறந்த ஜெய்சங்கரை ஏன் தென் சென்னையில் நிறுத்தவில்லை? ஜெய்சங்கருக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் ஒரு நீதி, பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு நீதியா?.

இதுதான் பாசிச பாஜ பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது தேர்தல் பத்திரம் தொடர்பாக பேச வேண்டும். சி.ஏ.ஜி. அறிக்கையில் பாஜ ஊழல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மோடி பதில் சொல்ல வேண்டும். 2ஜி வரும் போது பேசிய மோடி சிஏஜி அறிக்கை பற்றி ஏன் பேச மறுக்கிறார். எங்கள் கூட்டணியில் உள்ள ஐ.யு.எம்.எல்., சார்பில் ராமநாதபுரத்தில் இஸ்லாமியர் போட்டியிடுகிறார். சிறுபான்மையின மக்களின் சார்பில் ஒரு கிறிஸ்தவருக்கு காங்கிரசில் தொகுதி ஒதுக்கி உள்ளோம். சமூக நீதி என்றால் எங்கள் இயக்கம்தான். ராகுல் காந்தியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்கள். விரைவில் சுற்றுப்பயண விவரத்தை வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் இணைந்து பிரசாரம்: செல்வப்பெருந்தகை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: