மேலும், கொளத்தூர் சிவபார்வதி நகரில் வசித்து வரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான முத்து என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக எத்தனை கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் மொரிஷியஸ் நாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மொரிஷியஸ் நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக மொரிஷியஸ் தூதரக அதிகாரி, 2 தொழிலதிபர் வீடுகளில் ரெய்டு: முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை appeared first on Dinakaran.