இதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன், ரவீந்திரன், அரசு கூடுதல் பிளீடர் சாதிக்ராஜா ஆகியோர் ஆஜராகி, ‘‘நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டு அதற்குரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், காலதாமதத்தை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது. இதற்காக வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். தண்டனை வழங்கிய உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தண்டனை வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post ஐஏஎஸ் அதிகாரி சிறை தண்டனை நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.