இதுகுறித்து கூலி தொழிலாளர்கள் கூறுகையில், ‘’ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, கேரளா உள்பட பல வெளிமாநிலங்களில் இருந்துவரும் கூலி தொழிலாளர்கள் வருகின்றனர். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். எங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் அருகில் மருத்துவமனை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதனால் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மருத்துவமனை கட்டித் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மருத்துவமனை கட்டப்படுகிறது. மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரவேண்டும்’ என்றனர்.
The post கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மருத்துவமனை கட்டிட பணி தீவிரம்: வியாபாரிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.