அந்த கப்பலில் இருந்த பணியாளர்களை அந்த கும்பல் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றது. மேலும் அந்த குழு வெளியிட்ட அறிக்கையில், ‘காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தும் வரை சர்வதேச கடல் பகுதி வழியாக செல்லும் இஸ்ரேல் கப்பல்களை குறிவைத்து தாக்குவோம் அல்லது கடத்துவோம்’ என்று எச்சரித்துள்ளது. கடத்தப்பட்ட கப்பலில் பஹாமாஸ் கொடி கட்டப்பட்டிருந்தது. பல்கேரியர்கள், பிலிப்பினோக்கள், மெக்சிகன்கள், உக்ரேனியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பணியாளர்கள் இருந்தனர்.
ஆனால் அவர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த கப்பல் கடத்தப்பட்டதை தீவிரவாதிகளின் செயல் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த கப்பல் பிரிட்டனுக்கு சொந்தமானது என்றும், ஜப்பானால் இயக்கப்படுவது என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்’ என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post துருக்கி வழியாக 25 பணியாளர்களுடன் இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் கடத்தல்: இஸ்ரேலுக்கு எதிராக ஹவுதி போராளிகள் அட்டூழியம் appeared first on Dinakaran.