×

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் ரூ.41 கோடி மதிப்பு ஹெராயின் போதை பொருள் பறிமுதல்

*ஜாம்பியாவை சேர்ந்த பெண் கைது

திருமலை : தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் ரூ.41 கோடி மதிப்புள்ள 5.92 கிலோ ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஜாம்பியாவை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஷம்ஷாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் விமானத்தில் இருந்து வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். அப்போது வெளிநாட்டு பெண் பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஹெராயின் போதை பவுடர் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

உடனே சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்து, ரூ.41 கோடி மதிப்புள்ள 5.92 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பயணியிடம் விசாரணை நடத்தியதில் ஜாம்பியாவைச் சேர்ந்த லுசாகா என்பது தெரியவந்தது. இந்த போதை பவுடர் எங்கிருந்து யார் மூலம் கொண்டு வரப்பட்டது. ஐதராபாத்தில் யாருக்கு கொடுக்க இருந்தார் போன்ற விவரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

The post ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் ரூ.41 கோடி மதிப்பு ஹெராயின் போதை பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Shamshabad airport ,Tirumala ,Telangana ,Dinakaran ,
× RELATED நடிகர் நாக சைதன்யா- சமந்தா...