பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பேசிய கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை,”அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை மேற்கொண்ட பிரதமர் மோடியை சந்தித்தது, மிகவும் பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மையமாக்கல் நிதியில் 82 ஆயிரம் கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் விரைவில் முதலீடு செய்ய உள்ளது.குஜராத்தின் கிப்ட் சிட்டியில் கூகுளின் சர்வதெச பின்டெக் செயல்பாட்டு மையத்தை திறக்க உள்ளோம்,”என்றார். அதே போல், இந்தியாவில் மேலும் ரூ.1.22 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சுமார் ரூ. 90 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ள நிலையில், மேலும் முதலீடு செய்கிறது அமேசான் நிறுவனம்.
The post குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையம்.. டிஜிட்டல் மையமாக்கல் நிதியில் 10 மில்லியன் டாலர் முதலீடு : கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை appeared first on Dinakaran.