இதனிடையே கடந்த மாதம் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி மாளிகையில் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை கிண்டி, பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை கொடுத்தார். முதல்வரின் அழைப்பை ஏற்ற திரவுபதி முர்மு வருகிற ஜூன் 5ம் தேதி தமிழகம் வருவதாகவும் அன்றைய தினமே கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கரீபியன் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் சென்னை வருகை திடீரென ரத்தானது. இந்நிலையில் சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜூன் 15ம் தேதி குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டுக்கு வருகை புரிகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் ஐந்தாம் தேதிக்கு பதில் ஜூன் 15ம் தேதி மருத்துவமனையை குடியரசு தலைவர் திறந்து வைக்க உள்ளார்.
The post ஜூன் 15ம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்!! appeared first on Dinakaran.