ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் சட்டப்பேரவைக்கு திரும்பி அனுப்ப வேண்டும். அதில் திருத்தம் செய்ய வலியுறுத்தலாம். அதுதொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது. இந்த விஷயத்தில் ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும். இதில் காலதாமதம் செய்வது அரசியலமைப்பிற்கு எதிரானது. மேலும், மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அதோடு, சட்டசபை கூட்டத்தின் செல்லுபடியாகும் நிலையை தீர்மானிக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு இல்லை. கூட்டத்தொடரில் சந்தேகம் எழுப்பும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும்’ என்று கூறப்பட்டுள்ளது.
The post மாநில சட்டப்பேரவையில் சட்டம் இயற்றுவதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.