அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,45,297 தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத்திட்ட கணக்கு தாட்கள் தொகுக்கப்பட்டு இன்று (26ம் தேதி) காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது. அத்துறையின் ‘cps.tn.gov.in/public’ என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டக் கணக்கு தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: