அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் கிளை

மதுரை: கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் சமுதாயம் என்று அரசு அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்த ஆணையிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மதுரை, மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனிப்பட்ட நபரின் விருப்பங்களுக்காக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: