அரசு உதவிபெறும் பள்ளிகளில், உபரி பணியிடங்களில் உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்யுமாறு ஏற்கனவே,உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை என்னும், ‘எமிஸ்’ இணையதளத்தில், பணிநிரவல் கலந்தாய்வு நடத்த, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி நிரவலுக்கு பிறகும், மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்கள், காலியிடங்களை, வரும் 29ம் தேதிக்குள்,அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
The post அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் கவுன்சிலிங் என அறிவிப்பு appeared first on Dinakaran.