இந்த நிலையில் நேற்று மாலையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று மாலையில் தங்கம் விலை, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,510க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,080க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1104 உயர்ந்துள்ளது.
The post தங்கம் விலை ஒரே நாளில் ரூ.640 உயர்ந்தது appeared first on Dinakaran.