சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலக்கட்டதில் மழைநீரை முறையாக சேமிக்க வேண்டும். கடந்த காலங்களில் நிலத்தடி மழைநீர் சேமிப்பு திட்டம் அனைத்து இல்லங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொது அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவற்றை தற்பொழுது மீண்டும் சரிசெய்து நிலத்தடியில் மழைநீரை சேமிக்க உரிய நடவடிக்கையை அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு நகராட்சி மற்றும் மாநகராட்சி சாலைகள் பழுதடைந்து வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையுள்ளது. தற்பொழுது பெய்யும் மழையால் அவை மேலும் பழுதடைய வாய்ப்புள்ளது. ஆகவே சாலைகளையும், மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் பணியையும் முடித்து, மக்களின் இயல்புநிலை பாதிக்காமல் காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் மழைநீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.