- பிற்பகல்
- கொல்கத்தா
- கி.
- TD
- பிபாக் டெப்ரோய்
- பொருளாதார ஆலோசனைக் குழு
- யால் ஊராட்சி
- பொருளாதார ஆணையம்
- தின மலர்
கொல்கத்தா: ஜி.எஸ்.டி.யால் அரசாங்கம் வருவாயை இழக்கிறது என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் டெப்ராய் தெரிவித்தார். கொல்கத்தா வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் பிபேக் டெப்ராய் கூறியதாவது: சராசரி ஜிஎஸ்டி விகிதம் குறைந்தபட்சம் 17 சதவீதமாக இருக்க வேண்டும். இப்போது 11.4 சதவீதமாக உள்ளது. எனவே ஜிஎஸ்டியால் அரசு வருவாயை இழக்கிறது. 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விகிதம் குறைய வேண்டும் என்று பொதுமக்களும் ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர்களும் விரும்புகிறார்கள், ஆனால் 0 சதவீதம் மற்றும் 3 சதவீத வரி விகிதங்கள் உயர்த்தப்படுவதை யாரும் விரும்பவில்லை.
அப்படியானால், நாம் ஒருபோதும் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியைப் பெற மாட்டோம். ஜிஎஸ்டி விதிகளில் நிறைய துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. அரசு செலவு செய்ய வேண்டும் என்றால், வருவாய் தேவை. குடிமக்களாகிய நாம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்தை வரியாக செலுத்துகிறோம். இதன் பொருள் என்னவென்றால், நாங்கள் 15 சதவீதத்தில் வரி செலுத்துகிறோம், ஆனால் அரசிடம் நமது எதிர்பார்ப்புகள் 23 சதவீத அளவிற்கு உள்ளன. எனவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், வரியாக அதிகமாகச் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும் .2035க்குப் பிறகு முதியோர்களின் சுமை நாட்டிற்கு சவாலாக இருக்கும். 2035க்கு அப்பால் இந்தியா மிக வேகமாக முதுமை அடையும். ஆண்டுக்கு 80 லட்சம் வேலைகளுக்கு பதில் நாம் 50 லட்சம் வேலைகளை உருவாக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஜிஎஸ்டியால் அரசுக்கு வருவாய் இழப்பு கூடுதல் வரி செலுத்த தயாராகுங்கள்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் எச்சரிக்கை appeared first on Dinakaran.