சென்னை: முழுநேர ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் முதல்வரின் உதவித் தொகை பெற நவம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் 120 பேருக்கு ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகை தொடர்பான மேல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
The post முழுநேர ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் முதல்வரின் உதவித் தொகை பெற நவ. 15 வரை விண்ணப்பிக்கலாம்..!! appeared first on Dinakaran.