முகச்சுருக்கத்தை போக்கும் சுரைக்காய்

நன்றி குங்குமம் தோழி

* சிலருக்கு முகத்தில் சுருக்கம் விழுந்து வயதானவர்களை போல காணப்படுவார்கள். இவர்கள் சுரைக்காய் கலவையை முகத்தில் நன்றாகப் பூசி அரை மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இப்படிச் சில தினங்கள் செய்தாலே போதும். முகத்திலுள்ள சுருக்கம் படிப்படியாகக் குறைந்து இறுதியில் மறைந்தே போய்விடும்.

* கண்களுக்கு அடியில் கருவளையம் விழுந்திருக்கும். இவர்கள் சுரைக்காய் கலவையை உபயோகப்படுத்தி கருப்பு வளையத்தைப் போக்கி விடலாம்.

தோலில் சுருக்கம் ஏற்படுவதற்குக் காரணம், தோலில் ஈரப்பதம் உலர்ந்து போவதுதான்! அதேபோல் கருவளையம் தோன்றுவதற்குக் காரணம் தோலுக்கு அடியில் உள்ள நிறமிகள் (மெலோனின்) குறைந்து போவதுதான்!

* ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி விடுகிறது. முப்பது நாட்கள் வெறும் வயிற்றில், காலையில் தொடர்ந்து சுரைக்காய் சாறு குடித்து வந்தால், அடைப்புகள் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். இதய நோய் காணாமல் போய்விடும்.

சுரைக்காய் சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

* இதயம் சுருங்கும் சக்தியை மேலும் அதிகப்படுத்துகிறது.

* இதயத்துடிப்பின் வேகத்தைக் குறைக்கிறது. இவைகள் மூலம் இதயம் ஓய்வெடுக்கும் நேரம் அதிகமாவதால், இதயத்தின் இயக்கம் நன்றாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகிறது. கல்லீரலின் செயல்பாடு வலிமை பெறுகிறது.

* உடலில் கெட்ட கொழுப்பு சேராமல், நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகமாக்க உதவுகின்றது. ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கிறது.

* சுரைக்காய் சாற்றினை தயாரித்து முப்பது நிமிடத்திற்குள் உடனே குடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் சுரைக்காயிலுள்ள மருத்துவ குணங்கள் படிப்படியாகக் குறைந்து கொண்டே வரும்.

– சுருணிமகன், தாராபுரம்.

The post முகச்சுருக்கத்தை போக்கும் சுரைக்காய் appeared first on Dinakaran.

Related Stories: