நாகப்பட்டினத்தில் காவலர்கள் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்

 

நாகப்பட்டினம்,ஜூலை31: நாகப்பட்டினம் காவல்துறையினர், ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமை வகித்தார். திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு மருத்துவமனையில் இருந்து சிறந்த மருத்துவர்களை கொண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறையினர், ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம் மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பெண்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

The post நாகப்பட்டினத்தில் காவலர்கள் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: