கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிரதமருக்கு அவசர கடிதங்கள் எழுதினார். இதையடுத்து 13 மீனவர்களையும் கடந்த மாதம் 21ம் தேதி, இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் 13 மீனவர்கள், இலங்கையில் இருந்து நேற்று காலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை வந்த 13 மீனவர்களையும் விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பிறகு அதிகாரிகள், மீனவர்களை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 13 பேர் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.