சண்டை போட வேண்டாம், பேசி தீர்த்துக் கொள்ளலாம்: தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்பு பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்நிவாஸில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரச்னை என்றால் நேரில் வந்து பேசுங்கள், ஆரோக்கியமான சூழல் வேண்டும். தெலங்கானாவில் மசோதாவுக்கு கையெழுத்து போடாததால் நீதிமன்றம் சென்றார்கள். இது அந்தந்த மாநில பிரச்னை. தமிழக அரசின் மசோதாவில் கவர்னர் கையெழுத்து போடாதது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

புதுச்சேரியில் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், கவர்னர் இந்த இணைப்பு சரியாக இருக்கவேண்டும். எங்கு குறை இருந்தாலும் சரி செய்யலாம். அதிகாரிகளால் முதல்வருக்கும், எனக்கும் சங்கடங்கள் இருக்கலாம். அது சரிசெய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும்.தமிழகத்திலும் முதல்வரும், கவர்னரும் உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டையே போட வேண்டியதில்லை. தெலங்கானாவிலும் இதை சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post சண்டை போட வேண்டாம், பேசி தீர்த்துக் கொள்ளலாம்: தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: