அப்போது கணக்கில் வராத ரூ.3 லட்சம் மற்றும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இவை அனைத்தும் லஞ்சமாக பெற்ற பணம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே போக்குவரத்து துறை சார்பில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, ஆய்வாளர் வசந்தியை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் நேற்று உத்தரவிட்டார்.
The post ரூ.6.25 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.