இதனால் வணிக வளாகம் ஓராண்டாகியும் செயல்படவில்லை. இதற்கிடையே ஜவுளி சந்தையில் இருந்த கடைகளை மாநகராட்சி கடந்த ஆகஸ்ட் மாதம் இடித்து அகற்றியது. பின்னர் வியாபாரிகள் தொடர்ந்த வழக்கில் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை பழைய இடத்தில் கடைகள் செயல்பட சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சுமார் 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் கனி மார்க்கெட் பழைய இடத்தில் செயல்பட தொடங்கியது. இதனிடையே புதிய வணிக வளாகத்தில் தங்களுக்கு நிரந்தர கடைகளை மாநகராட்சி ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், மற்ற தினங்கள் விட செவ்வாய் கிழமை வாரச்சந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநில வியாபாரிகள் வருவது வழக்கம். நேற்று நடைபெற்ற சந்தையில் குறைந்த அளவு வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கூறினர். எனினும் வரும் வாரங்களில் தீபாவளி விற்பனை சூடுபிடிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
The post ஈரோட்டில் மீண்டும் திறக்கப்பட்ட மாநகராட்சி ஜவுளி சந்தை: வெளிமாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் மந்தமாக இருப்பதாக தகவல் appeared first on Dinakaran.