ஈரோடு பாஜக நிறுவனர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மோதல்: மாவட்ட தலைவர் நிர்வாகி ஒருவரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு பாஜக அலுவலகத்தில் நிறுவனர் பிறந்தநாளை கொண்டாடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டு மாவட்ட தலைவர் நிர்வாகி ஒருவரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு இந்திரா நகரில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பாஜக ஓபிசி அணி மாநில துணை தலைவர் ஆற்றல் அசோக்குமார் மற்றும் அவரது தாயாரும் முன்னாள் எம்.பி.யுமான சௌந்தரம் ஆகியோர் தனியாக நிறுவனரின் புகைப்படத்தை கொண்டு வந்து அதற்கு மலை அணிவித்து அதனை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

தனக்கு தெரியாமல் நடக்கும் இந்த நிகழ்வினை கண்டு ஆவேசமடைந்த பாஜக மாவட்ட தலைவர் வேதனந்தம் அசோக் குமாருடன் கடும் வாக்குவாதம் செய்தார். அவரை முன்னாள் எம்.பி.சௌந்தரம் சமாதானம் செய்தார். எனினும் அவர் கையை உதறிவிட்டு அங்கிருந்த நிர்வாகி ஒருவரை வேதனந்தம் அடிக்க பாய்ந்தார். பின்னர் அங்கிருந்தவர்களை சௌந்தரம் சமாதானம் செய்த பிறகு தனியாக அசோக் குமார் நிறுவனர் படத்திற்கு மாலை அணிவித்து விட்டு புறப்பட்டு சென்றார். சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த இந்த காட்சிகளை உடன் இருந்த பாஜக நிர்வாகி ஒருவர் பதிவு செய்துள்ளார்.

The post ஈரோடு பாஜக நிறுவனர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மோதல்: மாவட்ட தலைவர் நிர்வாகி ஒருவரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: