அவர் தனித்து முடிவு எடுப்பார். நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என மட்டும் தான் கூறியுள்ளோம். ஓபிஎஸ் செயல்பாடு பற்றி எதுவும் சொல்ல முடியாது. எடப்பாடியுடன் கூட்டணி சேரக்கூடாது என 90 சதவீத அமமுகவினர் விரும்புகின்றனர். ஓபிஎஸ் எடப்பாடியுடன் சேர்ந்தாலும் நாங்கள் சேர மாட்டோம். ஓபிஎஸ்சின் சுபாவம் எனக்கு தெரியும். ஆனால், எடப்பாடியின் சுபாவம் எனக்கு தெரியாது. தன்னை பதவியில் வைத்தவர்களையே இழிவாக பேசும் குணம் படைத்தவர். அவர் திருந்துவாரா, மாட்டாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். காவிரி பிரச்னையில் அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்கள் ஜனநாயகம், நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
The post இபிஎஸ், ஓபிஎஸ் சேர்ந்தாலும் நாங்கள் சேர மாட்டோம்: டிடிவி திட்டவட்டம் appeared first on Dinakaran.