×

இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா-ஏ அணி அறிவிப்பு

புதுடெல்லி: இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ள இந்தியா-ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி, மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் ஜன.25ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக, இங்கிலாந்து அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலில் 2 நாள் பயிற்சி ஆட்டம் ஜன.12,13 தேதிகளில் அகமதாபாத், மோடி ஸ்டேடியத்தில் பி மைதானத்திலும், அடுத்து 4 நாள் பயிற்சி ஆட்டம் (ஜன. 17-20) மோடி அரங்கிலும் நடைபெற உள்ளன.

இந்த போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் மோதவுள்ள இந்தியா-ஏ அணியை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா நேற்று அறிவித்தார். அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான அணியில் மொத்தம் 13 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா-ஏ: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் பத்திதார், சர்பராஸ் கான், பிரதோஷ் ரஞ்சன் பால், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், புல்கிட் நரங், நவ்தீப் சைனி, துஷார் தேஷ்பாண்டே, வித்வத் கவெரப்பா, துருவ் ஜுரெல் (கீப்பர்), ஆகாஷ் தீப்.

The post இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா-ஏ அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : England ,India ,New Delhi ,India-A ,Hyderabad ,Rajiv Gandhi International ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு...