இதற்கு எதிரான மனுக்கள் நீதிபதி கள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, திரிவேதி அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் ஒருவர் குற்றவாளியா, சாட்சியா என்ற தெரியாத நிலை உள்ளதாக கூறினார். ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா, யாராவது ஒருவர் நீதிமன்றத்தை அணுகி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்ய வேண்டும் என்று கோரினார் என்பதற்காக தேவையின்றி மறு ஆய்வு செய்யக் கூடாது என்று ஆட்சேபம் எழுப்பினார்.
கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று மெஹ்தா தெரிவித்தார். அப்போது பண மோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான சில சிக்கல்களை ஏற்கனவே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு எடுத்துரைத்துள்ளதால் பணப்பரிமாற்றம் வரையறுக்கப்பட்டுவிட்டதாக சிறப்பு அமர்வு கூறியது. எனினும் மறுபரிசீலனை தேவையா என்பது தான் இப்போதைய பிரச்சனை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட பின் தேவையில்லை என அமர்வு கருதினால் தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்படாது என்று அவர்கள் கூறினர். மனுதாரர்கள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
The post அமலாக்கத்துறையின் கைது அதிகாரத்தை உறுதிப்படுத்திய தீர்ப்பு… மறு பரிசீலனை செய்வது குறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு!! appeared first on Dinakaran.
