புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மேற்குவங்கத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா 2வது அலை காரணமாக நோயாளிகள் அலை அலையாய் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியுடன் பேசப் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் மேற்குவங்க தேர்தலுக்கான பரப்புரையில் பிஸியாக இருப்பதாக பதில் வந்தது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். கொரோனா பரவலுக்கு காரணம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர்தான் காரணம் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், மக்கள் கொரோனாவால் உயிரிழப்பதை கண்டுகொள்ளவில்லை என்றும் பல்ேவறு எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.