சென்னையில் ஜூன் 1ல் வேட்புமனு தாக்கல் மதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 14ம் தேதி நடக்கிறது: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 14ம் தேதி நடக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மதிமுக அவை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐவர் (ஒருவர் மகளிர்) ஆகிய பொறுப்புகளுக்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழுவுக்கு தகுதி பெற்ற இருபத்தைந்து பேர் முன்மொழிந்தும், இருபத்தைந்து பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக 7 பேரும், தணிக்கைக்குழு உறுப்பினர்களாக 6 பேரும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழு தகுதி பெற்ற 10 பேர் முன்மொழிந்தும், 10 பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் ஜூன் 1ம் தேதி காலை 10 மணி முதல் 12 பகல் மணி வரை தலைமை அலுவலகத்தில் நடைபெறும். வரும் 27ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அமைப்புச் செயலாளர் பிரியகுமார் மற்றும் கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் ஆகியோரிடம் உரிய கட்டணத்தைச் செலுத்தி வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். வேட்பு மனுக்களை ஜூன் 3ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம். தேர்தல் ஆணையாளர்களாக அமைப்புச் செயலாளர் பிரியகுமார், கொள்கைவிளக்க அணிச் செயலாளர் வந்தியத்தேவன், தேர்தல் பணிச் செயலாளர் அந்திரிதாஸ் ஆகியோர் செயல்படுவர். இந்த பொறுப்புகளுக்கான தேர்தல் ஜூன் 14ம் தேதி சென்னை அண்ணா நகர் புதிய ஆவடி சாலை சந்திப்பில் உள்ள விஜய் மகாலில் மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெறும்.

The post சென்னையில் ஜூன் 1ல் வேட்புமனு தாக்கல் மதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 14ம் தேதி நடக்கிறது: வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: