அப்போது, காவல் அதிகாரிகள் பணியிலும், குடும்ப வாழ்விலும் சிறந்து விளங்கவும், மன நலனையும், உடல் நலனையும் பேணி காக்கவும் தகுந்த மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், தங்களுக்கு கீழ் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நலனை கையாள்வது, குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வது குறித்தும், பணியின் போது சக காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நடந்துகொள்ளும் முறை குறித்தும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மூத்த மனநல மருத்துவர் பிரபாகர், மனநல மருத்துவர் லட்சுமி, மனநல ஆலோசகர் செல்வி, சத்யதனக்கோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post பணித்திறனை மேம்படுத்தும் வகையில் காவல் அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: கமிஷனர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.