அதனை தொடர்ந்து, சென்னை முழுவதும் கடந்த 10ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் நிலுவையில் இருந்த 387 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதமாக ரூ.39.70 லட்சம் வசூலிக்கப்பட்டது. அதன்படி சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 5 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 13,638 பேரிடம் அபராதமாக 14 கோடியை 10 லட்சத்து 95 ஆயிரத்து 100 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி அபராதம் செலுத்தாமல் உள்ள நபர்களிடம் இருந்து 370க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
The post குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சென்னையில் 5 மாதத்தில் ரூ.14.10 கோடி அபராதம் வசூல்: மாநகர காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.