×

குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம்: பகுதி அலுவலகங்களில் இன்று நடைபெறுகிறது

சென்னை: குடிநீர், கழிவுநீர் பிரச்னை குறித்து இன்று நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று, குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மாதத்தின் 2வது சனிக்கிழமைகளில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம், சென்னையில் உள்ள 15 பகுதி அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம்: பகுதி அலுவலகங்களில் இன்று நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : drinking ,board ,CHENNAI ,Drinking Water Board ,Chennai Drinking Water Board ,
× RELATED குடிநீர், கழிவுநீரகற்று வரி மற்றும்...