கூட்டத்தில் இருந்தவர்களை கவர்வதற்காக மோடியை போன்று வேடமணிந்து வந்த நபரை உண்மையான மோடி என நினைத்து பலர் கட்டி தழுவினர். நிகழ்ச்சியின் இறுதியில் அர்ஜுன் சம்பத் பேச வந்த போது கஸ்தூரிக்காக காத்திருந்தவர்கள் கலைந்து சென்றனர். கூட்டம் முடிந்த பிறகு இரவு 10 மணியளவில் அங்கு வந்த கஸ்தூரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முழுமையான வெற்றியை பெறும் என கஸ்தூரி பேசியதால் அவர் அருகே நின்றிருந்த அர்ஜுன் சம்பத் அதிர்ச்சி அடைந்து வெளியேறினார்.
The post திமுக கூட்டணி வெல்லும் என பாஜக ஆதரவு கூட்டத்தில் பேசிய கஸ்தூரியால் அர்ஜுன் சம்பத் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.