இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், வெடிக்கக் கூடிய பொருட்களை நீதிமன்ற பாதுகாப்பில் வைத்திருப்பது சரியாக இருக்காது. பட்டாசு பொருட்களை வைத்திருக்க முறையான அனுமதி பெறாத நிலையில் அந்த பொருட்களை பாதுகாப்பது சரியாக இருக்காது. எனவே மனுதாரர் அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற வேண்டும். அங்குள்ள பட்டாசுகளை மனுதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அவர் பட்டாசுகளை எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம். அதே நேரம் போலீசார் பட்டாசுகளின் பட்டியலை தயார் செய்து வழக்கு நடைமுறைகளை தொடரலாம். மனுதாரர் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
The post தீபாவளி பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ள பார்சல் அலுவலகத்தின் சீலை அகற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.