டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பது குறித்து விதிகள் வகுக்க டிஜிபி-க்கு 4 வாரம் அவகாசம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குற்ற வழக்குகளில் டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பது குறித்து விதிகள் வகுக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டிஜிபிக்கு 4 வாரம் அவகாசம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. ஒரு கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது. தீவிர குற்ற வழக்குகளிடைய விசாரணை தரத்தை மேம்படுத்த சிறப்பு பிரிவை ஏன் அமைக்க கூடாது என்று விளக்கமளிக்க தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 11 தாலுக்காகளில் குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த தீவிர குற்ற வழக்குகளில் உரிய காலத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பது தொடர்பான விதிகளை வகுக்கக்கூடிய நடைமுறை என்பது இறுதி கட்டத்தில் இருப்பதால் அதற்கு 2 வரகால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.

இதையடுத்து தீவிர குற்றங்களை விசாரிப்பதற்கு சிறப்பு பிரிவை துவங்குவதற்கான காலநிலைகளை அடையாளம் காண வேண்டும் என்று டிஜிபி-க்கு அறிவுறுத்திய நீதிபதிகள் டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுப்பது முக்கியம் என்பதால் இந்த விஷயத்தில் அவசரம் காட்டவேண்டாம் என்று 4 வாரகால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தீவிர குற்ற வழக்குகளின் புலன் விசாரணை செய்து குறித்த காலத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக இதனிடையே அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

The post டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பது குறித்து விதிகள் வகுக்க டிஜிபி-க்கு 4 வாரம் அவகாசம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: