அப்போது நீதிபதி, ‘‘ஆண்டுதோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், திருச்செந்தூர் கோயிலை தூய்மையாக வைத்து உள்ளனர். அதற்கு அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்தை பாராட்ட வேண்டும். மேலும் பக்தர்களுக்கு விபூதி கொடுப்பதில் கோயில் நடைமுறைகள், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். விபூதி கொடுக்கும் இடம் சன்னதியில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி இருந்தால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியும். இதுகுறித்து மனுதாரர் தரப்பில் எந்த இடம் என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறிய நீதிபதி, பிறகு விரிவான வாதத்திற்காக வரும் நவ. 24ம் தேதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் திருச்செந்தூர் கோயில் தூய்மையாக உள்ளது: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் பாராட்டு appeared first on Dinakaran.