குறிப்பாக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமை திட்டம் உட்பட அனைத்துக்கும் பயன் உள்ளதாக இருக்கும். இது தொழில்நுட்பத்துறையில் இருக்கும் டி.என்.இ.ஜி.ஏ என்ற நிறுவனத்தில் இருந்து தான் அந்த தகவல்கள் அனைத்தும் பரிமாற்றம் செய்யப்பட்டு, அதிலிருந்து ஆராய்ந்து விதிமுறைகளுக்கு யார் உட்பட்டு இருக்கிறார்கள், யார் இல்லை என்று ஆராய்வு செய்கிறோம். எனவே இந்த முன் மாதிரியான திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாட்டுக்கு நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று செய்து கொடுத்தமைக்காக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் வருமானவரித்துறை நிர்வாகத்தின் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் மேலும் உதவி தேவைப்படும் படசத்தில் தொடர்ந்து எங்களிடம் கேளுங்கள், முடிந்த அளவுக்கு செய்து கொடுக்கிறோம் என நிதி அமைச்சர் என்னிடம் உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
The post டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு appeared first on Dinakaran.