இதற்கிடையே மாப்பிள்ளை பார்க்கும் படலமும் முடிவடைந்து, நாளை மறுதினம் (8ம்தேதி) பெமிஷாவுக்கு, வேறொருவருடன் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள சுவர் ஏறி குதித்து தப்பிய பெமிஷா, தனது காதலன் ஸ்ரீராமுடன் குளச்சல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அங்கு வந்த இரு தரப்பு பெற்றோரிடம் இருவரும் சட்டப்படி மேஜர் என்பதால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என கூறி போலீசார், காதல் ஜோடியிடம் முறைப்படி பதிவு திருமணம் செய்யுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
The post வேறொருவருடன் நாளை மறுதினம் திருமணம் வீட்டின் சுவர் ஏறி குதித்து காதலனை கரம் பிடித்த பெண் appeared first on Dinakaran.