நாகப்பட்டினம்: நாகை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 200 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழையினால் வயலிலேயே சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பள்ளமான ஒரு சில வயல்களில் மழை நீர் தேங்கி நெல்மணிகளை சூழ்ந்ததால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.