×

வைகை அணையில் நீர் திறக்ககோரிய வழக்கு ஒத்திவைப்பு..!!

மதுரை: வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாய் மற்றும் திருமங்கலம் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வைகை அணையில் போதிய அளவில் நீர் இருப்பு இல்லை என்று ஐகோர்ட் மதுரை கிளையில் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஏற்கனவே குடிநீர், விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

The post வைகை அணையில் நீர் திறக்ககோரிய வழக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam ,Madurai ,Peryaru Canal ,Thirumangalam Canal ,
× RELATED யோகா தின விழிப்புணர்வு வைகை அணை பூங்காவில் மாணவர்கள் விழிப்புணர்வு