கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில், தாழங்குடா, அய்யம்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இதற்காக ஏற்கனவே தங்கள் படகுகளில் தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர், டீசல் மற்றும் ஐஸ் கட்டிகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். இவர்கள் தங்கள் படகுகளுக்கு படையலிட்டு, கடல் தேவதையை வணங்கி மீன்பிடிக்க சென்றனர். இதே போல அதிகாலை பைபர் படகுகளில் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பியதால், கடந்த ஒரு வாரமாக வெறிச்சோடி காணப்பட்ட மீன்பிடித்துறைமுகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.
The post கடலூர் கடற்கரை கிராமங்களில் ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்.! appeared first on Dinakaran.