இதனிடையில் பீதர் மாவட்ட புதிய போலீஸ் எஸ்பியாக பொறுப்பேற்ற எஸ்.எல்.சென்னபசவண்ணா, லாங்க் பென்டிங் ரிகார்ட்டில் சேர்க்கப்பட்ட கால்நடை திருட்டு வழக்கிற்கு உயிர் கொடுக்க தொடங்கினார். குற்றவாளிகள் எந்த காரணம் கொண்டும் சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பிக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கும் போலீஸ் எஸ்.பி. தலைமறைவாக இருந்த கணபதி விட்டல் வாக்மோரேவை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார். தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் சென்று, அம்மாநில போலீசாரின் ஒத்துழைப்பில் லாதூர் அருகில் உள்ள டாகளங்காவ் என்ற கிராமத்தில் இருந்த கணபதி விட்டல் வாக்மோரே (80)வை கைது செய்து பீதர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சுமார் 58 ஆண்டுகாலத்துக்கு பின் போலீசார் கைது செய்திருப்பதின் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.
The post சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது: மாடு திருடியவர் 58 ஆண்டுக்கு பின் கைது appeared first on Dinakaran.