இந்த விபத்து நிவாரண திட்டத்தின்படி ஒரு தொழிலாளி அவர் தன்னுடைய தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதோ அல்லது அத்தொழில் சார்ந்த இதர பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதோ விபத்துக்குள்ளாகி இறந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ கீழ்க்கண்டவாறு நிவாரண உதவித்தொகை வழங்கிடலாம். அந்த வகையில் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரண தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.
The post கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.
