அதிமுக கூட்டணியில் பாஜ அதிக தொகுதிகள் கேட்பது அவர்கள் உரிமை, 40 தொகுதிகளையும் கூட கேட்கலாம். ஆனால், எத்தனை தரவேண்டும் என முடிவு செய்வது அதிமுக தான். கர்நாடக சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது, ஷிமோகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர், கர்நாடகா மாநில பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல் நடத்திருக்கக் கூடாது. இது தமிழர்களுக்கு ஒரு துயரமான செய்தி. இவ்வாறு அவர் கூறினார்.
The post 40 தொகுதிகளையும் கேட்கலாம் பாஜவுக்கு எத்தனை ‘சீட்’ என முடிவு செய்வது அதிமுக தான்: தம்பிதுரை எம்பி பேட்டி appeared first on Dinakaran.