திருமலை: ஆந்திராவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகபட்சமாக சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ரூ300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சீனிவாசமங்காபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.