செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் 139வது ஆண்டு துவக்க விழா நடைப்பெற்றது. இதை முன்னிட்டு செங்கல்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாஸ்கர், முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி, மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் உருவ சிலைகளுக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை ஒட்டி அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் ரியாஸ்பாய், குமாரவேல், உமாபதி, ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post காங்கிரஸ் துவக்க விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.